உலக நன்மைக்காக 108 சங்காபிஷேகம்
ADDED :2109 days ago
ஈரோடு: உலக நன்மைக்காக, ஈரோட்டில், 108 சங்காபிஷேகம் நடந்தது. ஈரோடு, கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, மஞ்சள் நீராட்டுடன் நேற்று நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, மழை வளம், நீர் வளம், உலக ஒற்றுமை, உலக நன்மைக்காக, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.