அளவில்லாத மகிமை
ADDED :2237 days ago
சிவராத்திரி விரத மகிமையை யாரும் அளவிட முடியாது. விரதமிருப்போர் இப்பிறவியில் எல்லா வளமும் பெற்று, மறுபிறவியில் கைலாயத்தில் வாழும் பேறு பெறுவர். பத்ரி ஆஸ்ரமத்து முனிவர்கள் சிவராத்திரி விரத மகிமையால் பிறவாத முக்திநிலையை அடைந்தனர். அசுரனான இரணியன் விரத பயனால் தேவர்களை வெல்லும் ஆற்றல் பெற்றான். தமன் என்னும் மன்னன், சிவராத்திரி வழிபாட்டால் இந்திரனை வென்றான். சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் ஆகியோர் நற்கதியடைந்தனர்.