இது கண்ணீர் கதை
ADDED :2234 days ago
தாராட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதியாக இருந்தனர். அக்கோட்டைகளில் பறந்தபடியே விரும்பிய இடத்தில் இறங்கி, உயிர்களை எல்லாம் துன்புறுத்தி வந்தனர். இதையறிந்த சிவன் அசுரர்களுடன் போரிட்டுக் கொன்றார். வெற்றிக்களிப்பில் சிவனுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதுவே மண்ணில் விதைகளாக விழுந்து ருத்ராட்ச மரங்களாக வளர்ந்தன.