நால்வர் காட்டிய நல்லவழி
ADDED :2234 days ago
நான்கு வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைவாக செல்வது போல, பிறவிப்பயணத்தை எளிதில் கடக்க உதவுவோர் நால்வர். அவர்கள் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர். இவர்களால் பாடப்பட்ட தேவாரம், திருவாசகத்தை தினமும் பாடினாலும், ‘நமசிவாய’ ‘சிவாயநம’ சொன்னாலும் வாழ்க்கைப் பயணம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.