உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரகோட்டத்தில் வரும் 5ல் தவன உற்சவம்

குமரகோட்டத்தில் வரும் 5ல் தவன உற்சவம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், குமரகோட்டத்தில், மாசி தவன உற்சவம், வரும், 5ம் தேதி துவங்குகிறது.காஞ்சிபுரம், குமரகோட்டம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், மாசி மகத்தையொட்டி மூன்று நாட்கள் தவன உற்சவம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு உற்சவம், வரும், 5ம் தேதி துவங்குகிறது. உற்சவத்தையொட்டி, தினமும், இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், முருகப் பெருமான் வீதியுலா செல்கிறார்.பின், கந்தபுராண மண்டபத்தில், நறுமணம் கமழும் குளிர்ச்சி நிறைந்த, தவன அலங்கார பந்தலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்காம் நாளான, வரும், 8ம் தேதி மாசிமகம் உற்சவம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !