முருகா நீயே துணை.. வடபழனி கோயில் வாசலில் பக்தர்கள் வழிபாடு
ADDED :2293 days ago
வடபழனி : கொரோனா வைரஸ் மற்றும் 144 தடை உத்தரவால் கோவில் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு நாளில் எப்படியாவது இறைவனை வழிபட வேண்டும் என வடபழனி முருகன் கோவிலில, அடைக்கப்பட்ட கோயில் கதவுகளுக்கு வெளியே நின்று, முருகா நீயே துணை என பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.