கொரோனா நீங்க வேண்டி பனை ஓலையில் எழுதி வழிபாடு
ADDED :2015 days ago
தஞ்சாவூர், கொரோனா நோயிலிருந்து அனைவரையும் விடபட வேண்டியும், உலக நன்மைக்காகவும், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திவ்ய ஞானேஸ்வரர் கோவிலில், பிராத்தனை செய்து பனை ஓலையில், எழுதி மூலவரிடம் வாசித்து, ஓலையை பஸ்பம் செய்து நீர்நிலையில் கரைத்து வழிபாடு செய்தனர்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் நீங்க வேண்டியும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையை வேண்டியும், உலக நன்மைக்காகவும், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத திவ்ய ஞானேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், பிரதோஷ கால பூஜை வேளையில் ஸ்ரீ பூர்வ காரணாகமத்தில் அருளிய வண்ணம் பிராத்தனையை பனை ஓலையில் எழுதி, அதை மூலவர் சன்னதியில் வைத்து, அதையை பஸ்மம் செய்து நீர்நிலையில் கரைக்கப்பட்டு வழிபாடு நடத்தினர்.