கடன் பிரச்னை தீர்க்கும் ஆதிநரசிம்மர்
ADDED :2049 days ago
நாகபட்டினம் மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருக்குறையலுாரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும்.
திருமங்கையாழ்வாரின் அவதார தலமான இங்கு தை அமாவாசையை ஒட்டி இத்தலத்திற்கு அருகிலுள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும். அப்போது திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள ‘திருப்பால்லாண்டு தொடக்கம்’ என்னும் தமிழ் மறை பாடி வழிபடும் வைபவம் நடக்கும்.
பழமையான இத்தலம் ‘ஆதிநரசிம்மர் தலம்’ என்றும், தென்னிந்தியாவின் சிறந்த நரசிம்ம ேக்ஷத்திரம் என்பதால் ‘தட்சிண நரசிம்மர் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மூலவருக்கு பிரதோஷத்தன்று விசேஷ பூஜை நடக்கும். மனநல பாதிப்பு, கடன் தொல்லை, குடும்ப பிரச்னை தீர சுவாதி நட்சத்திரத்தன்று நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்கின்றனர். அமிர்தவல்லித்தாயார், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி உள்ளது. அமாவாசையன்று இங்கு நடக்கும் சுதர்சன ேஹாமத்தில் பங்கேற்றால் கிரக, பித்ரு தோஷம் நீங்கும்.
நேரம்: காலை 8:00 – 11:00 மணி, மாலை 4:00 – இரவு 7 மணி
தொடர்புக்கு: 94435 64650, 94430 07412