தேய்பிறை நாட்களில் சுபநிகழ்ச்சி செய்யக்கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன?
ADDED :2151 days ago
நட்சத்திரங்களுக்கு அதிபதி சந்திரன். நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்யும்பொழுது அவற்றின் தலைவனாகிய சந்திரன் வளர்பிறையாக அதாவது பலமுள்ளவனாக இருக்க வேண்டும். அதனால் தான் தேய்பிறையில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள். தேய்பிறை நாட்களில் சப்தமி வரை சுபகாரியங்கள் செய்யலாம்.