உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதெல்லாம் என்ன! பாலை சூலை ஓலை காலை...!

இதெல்லாம் என்ன! பாலை சூலை ஓலை காலை...!


ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய அடியவர்களை நால்வர் என குறிப்பிடுவர். இவர்களை சிவபெருமான், ‘பாலை, சூலை, ஓலை, காலை’ தந்து நான்குவிதமாக ஆட்கொண்டதாக சொல்வர்.
* மூன்று வயது குழந்தையான ஞான சம்பந்தர் பசியால் அழுத போது சிவன் அம்மையப்பராகத் தோன்றி ‘பாலை’ கொடுத்து தேவாரம் பாட வைத்தார்.
* சிவ வழிபாட்டை மறந்து மனம் போல வாழ்ந்த நாவுக்கரசருக்கு ‘சூலை’ என்னும் வயிற்று நோயைக் கொடுத்து ஆட்கொண்டார். * முதியவர் வடிவில் வந்த சிவன், சுந்தரரைத் தன் அடிமை என்று சொல்லி அதற்கான சாட்சியாக ‘ஓலை’(அடிமை சாசனம்) காட்டி ஆட்கொண்டார்.
* குருநாதராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரின் தலையில் தன் ‘காலை’ (திருவடியை) வைத்து தீட்சை அளித்து ஆட்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !