விநாயகருக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா?
ADDED :2277 days ago
பிரம்மச்சாரி, குடும்பஸ்தர் என இரு நிலைகளிலும் விநாயகர் வழிபாடு நடக்கிறது.
புராணத்தின் அடிப்படையில் அருள், அறிவு என்னும் பண்புகளையும் புத்தி, சித்தி என்னும் சக்திகளாக (மனைவியராக) ஏற்று ‘சித்தி புத்தி கணபதி’ எனப்படுகிறார். விநாயகர் மூலவராக உள்ள திருத்தலங்களில் ஆவணியில் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கும். மணம் புரியாமல் பிரம்மசாரி கோலத்தில் ஆற்றங்கரை, அரசமரத்தடியில் கோயில் கொண்டிருக்கிறார்.