தெப்பத்தேர் வைபவம் : பக்தர்கள் பரவசம்
ADDED :1 hours ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த, 11ம் தேதி மூன்று நாள் தேரோட்டம் துவங்கியது.
வெள்ளித்தேரில் மாரியம்மனும், மரத்தேரில் விநாயகப்பெருமானும் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
மூன்று நாள் தேரோட்டம் நேற்றுமுன்தினம் இரவு நிறைவடைந்தது. தொடர்ந்து, பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.நள்ளிரவு பாரம்பரிய முறைப்படி தெப்பத்தேர் வைபவம் நடந்தது. தெப்பக்குளத்தில் இருந்த மிதவை தேரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அம்மன், விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
மிதவை தேரில், மேள, தாள இசையுடன் அம்மன் வலம் வந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.