வடக்கூர் சிவன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2014 days ago
முதுகுளத்துார்:முதுகுளத்துார் வடக்கூர் சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவனுக்கு பால்,பன்னீர், சந்தனம் உட்பட21 வகையான அபிேஷகங்கள் நடந்தது. பின்பு சிவன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். இதேபோன்று செல்வி அம்மன் கோயில், முருகன்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.