உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்துக்காளி உண்டியல் வசூல் ரூ. 2.53 லட்சம்

கொண்டத்துக்காளி உண்டியல் வசூல் ரூ. 2.53 லட்சம்

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக இரண்டு லட்சத்து, 52 ஆயிரத்து 746 ரூபாய் செலுத்தி இருந்தனர்.

திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் இரண்டு உண்டியல் உள்ளன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், அவிநாசி ஆய்வாளர் செல்வ பிரியா, ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 2 லட்சத்து 58 ஆயிரத்து 846 ரூபாயும், தங்கம் 37.400 மில்லி கிராம், வெள்ளி 43.700 மில்லிகிராம், ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணிகள் பொதுமக்கள் 40 பங்கேற்றனர். கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் தக்கார், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !