கொரோனாவில் இருந்து விடுபட சண்டி ஹோமம்
ADDED :2093 days ago
ராமேஸ்வரம்: கொரோனாவில் இருந்து பொது மக்கள் விடுபட ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் சண்டி ஹோமம் நடந்தது.
ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் நிர்வாகி சாச்சா தலைமையில் 48 புரோகிதர்கள் மந்திரம் முழங்க சண்டி ஹோமம் நடத்தினர். நாடு முழவதும் பொதுமக்கள் கொரோனாவில் இருந்து விடுபடவும், பொருளாதார ரீதியாக மேம்படவும் வேண்டி கொள்ளப்பட்டது. மடுத்தின் மேலாளர் சுந்தர வாத்தியார் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.