திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா ரத்து
ADDED :2027 days ago
திருப்பரங்குன்றம்: கொரோனா தடை உத்தரவு காரணமாக திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, காலபூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பங்குனி, விசாக திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை (25ம்தேதி) முதல் ஜூலை 4ம் தேதி வரை நடக்கவிருந்த ஊஞ்சல் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக துணைகமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.