கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED :2073 days ago
கோவை: மசக்காளிபாளையம் பட்டத்து ஈஸ்வரி– கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை அதிகாலையில் அபிஷேகம் நடைபெற்றது. 16 வகை திரவியங்களால் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. சமூக இடைவெளி விட்டு நடைபெற்ற பூஜையில், தொடர்ந்து பன்னிருதிருமுறைகள் பாடப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இந்த ஆனி திருமஞ்சன நிகழ்ச்சியை ஒட்டி, கோவில் நந்தவனத்தில் வேப்ப மர கன்றுகள் நடப்பட்டது.