ஆயிரம் கண்ணுடையாள்
ADDED :1940 days ago
நமக்கு ஒரு ஊரும், பேரும் மட்டுமே இருக்கும். ஆனால், உலகாளும் நாயகிக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு திருநாமம். அவள் உலகையே ஆள்பவள் என்பதால் ஆயிரம் திருநாமங்களைப் பெற்றாள். தேவி பாகவதத்தில் அம்பிகையின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. அசுரர்களை அழிப்பதற்காக ஆயிரம் கைகளில் ஆயிரம் ஆயுதங்கள் ஏந்தி நிற்கிறாள். இவள் எங்கும் நிறைந்தவள். அவள் பார்வைக்குள்ளே உலகம் அடங்கி இருக்கிறது. அவள் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதனால் ‘ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்’ என தேவியைக் குறிப்பிடுவர். லலிதா சகஸ்ரநாமத்தில் ஆயிரம் கண்கள் கொண்டவள் என்னும் பொருளில் அம்மனுக்கு ‘சகஸ்ராக்ஷி’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.