உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பியநல்லூர் செம்பியம்மன் மாதேவி கோவிலில் ஆடி குண்டம் திருவிழா

செம்பியநல்லூர் செம்பியம்மன் மாதேவி கோவிலில் ஆடி குண்டம் திருவிழா

அவிநாசி; அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஸ்ரீ செம்பியம்மன் மாதேவி கோவிலில் 23ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


அவிநாசி அடுத்த செம்பியநல்லூரில் எழுந்தருளியுள்ள செம்பியம்மன் மாதேவி கோவிலில் 23ம் ஆண்டு ஆடிக் குண்டம் திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா, கடந்த 26ம் தேதி கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை,கொடி கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, அணி கூடை நகை அழைத்து வருதல்,பொங்கல் வைத்து குண்டம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று அம்மை அழைத்தல், கரகம், அணி கூடை, பம்பை வாத்தியம் ஆகியவற்றுடன் சிங்க வாகனத்தில் செம்பிய மாதேவி அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக கோவிலை வலம் வந்து, பக்தர்கள் குண்டம் இறங்குதல், பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை,முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு, மறுபூஜை ஆகியவற்றுடன் ஆடி குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக கோவை மாவட்டம், அன்னூர் காட்டம்பட்டி சக்தி மயூரன் குழுவினரின் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார வள்ளி கும்மி மற்றும் கம்பத்தாட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !