ஆவணி அவிட்டம்: பூணுால் மாற்றும் நிகழ்வு
ADDED :2201 days ago
விருத்தாசலம் : ஆவணி அவிட்டத்தை யொட்டி, மங்கலம்பேட்டை மாத்ரூபுரீஸ்வர் கோவில் வளாகத்தில், விஸ்வகர்மா சமூகத்தினர் புதிய பூணுாலை அணிந்து கொண்டனர்.
ஆடி மாத பவுர்ணமி தினமான நேற்று, அவிட்ட நட்சத்திரம் வந்ததால், ஆவணி அவிட்ட நிகழ்வு நடைபெறும்.மங்கலம்பேட்டை மாத்ரூபுரீஸ்வர் கோவில் வளாகத்தில் விஸ்வகர்மா சமூகத்தினர், கணபதி ேஹாமத்திற்கு பிறகு காயத்ரி மந்திரம் உச்சரித்து பூணுாலை மாற்றிக் கொண்டனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.