உயிருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?
ADDED :1988 days ago
ஏழுகடல் மணலைக் கூட எண்ணலாம். ஆனால் பிறவிக் கணக்கை எண்ண முடியாது. உடலுக்கு அழிவு உண்டு. உயிருக்கு அழிவே கிடையாது. பாவ, புண்ணியத்திற்குரிய பலனை அனுபவித்துத் தீரும் வரை உயிர் பிறப்பெடுக்கும். கர்ம வினையில் இருந்து முற்றிலும் விடுபட்ட உயிரை கடவுள் தம்முடன் சேர்த்துக் கொள்வார். இதுவே மோட்சம் என்னும் பேரின்பநிலை.