பிள்ளையார்பட்டியில் சிவ பூஜை அலங்காரத்தில் விநாயகர்
ADDED :2032 days ago
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா, கொரோனா ஊரடங்கால் கோயிலில் பக்தர்கள் அனுமதியின்றி ஆக.13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று சிவ பூஜை அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.