உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

கோவை : புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, கோவை பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  ஸ்ரீதேவி பூதேவி தமயந்தி உடன் பெருமாள் தங்க ஆபரணங்களால் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளியுடன் பெருமாளை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவை சிங்காநல்லூரிலுள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேதபுரி வரதராஜ சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !