உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழுத்த மரம் போல பயன் கொடுங்கள்

பழுத்த மரம் போல பயன் கொடுங்கள்

வழிகாட்டுகிறார் வாரியார்

* பழுத்த மரம் போல மனிதன் பிறருக்கு பயனுள்ளவனாக வாழ வேண்டும்.
* நேர்மையை பின்பற்றினால் வாழ்வு உயரும்.  
* ஒழுக்கமுள்ளவனாக வாழ பக்தியே சிறந்த வழி.
* பாவமும், புண்ணியமும் செயலைப் பொறுத்தது அல்ல. மனதைப் பொறுத்தது.  
* மாசில்லாத மனமே கடவுள் வாழும் வீடு
* சோர்வு இல்லாத முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.
* பாலுக்குள் இருக்கும் நெய் போல கடவுள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
* வெளிச்சத்தின் அருமை இருளில் புரியும். ஒருவரின் அன்பை அவர் இல்லாத போது தான் உணர முடியும்.
* பேராசை மனிதனை அழிக்கும். அன்பு அனைவரையும் வாழ வைக்கும்.  
* வளர்ச்சி, தேய்வும் வாழ்வில் மாறி மாறியே வரும்.
* நல்லது, கெட்டது தெரியாதவனை யாராலும் காப்பாற்ற முடியாது.
* செய்த நன்மை, தீமைக்கான பலனில் இருந்து யாரும் தப்ப முடியாது.
* அடக்கம், குருபக்தி கொண்டவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.  
* கீழ்நோக்கி பிடித்தாலும் தீ மேல்நோக்கி எரியும். அதுபோல் உயர்ந்த குணமுள்ளவர்கள் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது.
* நீதிநுால்களை தினமும் படியுங்கள். அது நம்மை நல்வழிப்படுத்தும்.
* பிறரது குற்றங்களை பெரிதுபடுத்தவோ, நாம் செய்த குற்றங்களை மறைக்கவோ கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !