வீரமாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :1963 days ago
சாயல்குடி: சாயல்குடி வீரமாகாளியம்மன் கோயிலில் 27ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. செப்.,25ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. கணபதி ஹோமம்,504 விளக்கு பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் மூலவர் வீரமாகாளியம்மனுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் பால்குடம், அக்னிச்சட்டி ஊர்வலம், அன்னதானம், பூத்தட்டு வீதியுலா நடந்தது.