திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :2092 days ago
திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நந்தீஸ்வரர், மூலவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் மகாஅபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாரதனை நடந்தது. மாலை பிரதோஷ நாயகர், அம்பாளுடன்கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இரும்பை: புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறைமாகாளேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நந்தி, மாகாளேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது.