ஆண்டுக்கு இரண்டு முறை நவராத்திரி
ADDED :1977 days ago
ஆண்டுக்கு இரண்டு முறை நவராத்திரி கொண்டாடும் வழக்கம் இருந்தது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர். இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை. கோடை, குளிர் என பருவம் மாறும்போது நோய் நொடி பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இதை நடத்தினர். ஆனால் சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்தது. புரட்டாசி சாரதா நவராத்திரியே வழக்கத்தில் உள்ளது.