நவராத்திரி அம்மன் வழிபாடு
முதல்நாள்அலங்காரம்: மகேஸ்வரி. (மது, கைடபர் என்னும் அசுரர்களை வதம் செய்வது போல்)கன்னி பூஜை: இரண்டு வயது சிறுமியை குமாரி என்னும் அம்பிகையாக பாவித்து வணங்குதல்.கோலம்: அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக் கோலம்பூக்கள்: மல்லிகை, செவ்வரளி, வில்வ மாலைநைவேத்யம்: வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மொச்சை, பருப்பு வடை.வழிபாட்டின் பலன்: செல்வ வளம் பெருகுதல், தீர்க்காயுள்.இரண்டாம் நாள்அலங்காரம்: ராஜராஜேஸ்வரி (மகிஷாசுரனை வதம் செய்வது போல்)கன்னி பூஜை: மூன்று வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து வழிபடுதல்கோலம்: கோதுமை மாக்கோலம்பூக்கள்: முல்லை, துளசி, சாமந்தி, சம்பங்கி மாலைநைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரைவழிபாட்டின் பலன்: நோய் தீரும். உடல்நலம் பெருகும்.மூன்றாம் நாள்அலங்காரம்: வராகி (பன்றி முகம் கொண்டவள்)கன்னி பூஜை: நான்கு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குதல் கோலம்: மலர்க்கோலம்பூக்கள்: செண்பக மலர் மாலை.நைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி (தட்டாம்பயறு) சுண்டல்வழிபாட்டின் பலன்: குறையில்லாத வாழ்வு அமையும்நான்காம் நாள்அம்பிகை: மகாலட்சுமி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்பூஜை: ஐந்து வயது சிறுமியை ரோகிணியாக பூஜித்தல்கோலம்: அட்சதை கோலம்பூக்கள்: செந்தாமரை, ரோஜா மாலைநைவேத்யம்: அவல், கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்வழிபாட்டின் பலன்: கடன் தொல்லை தீரும்.ஐந்தாம் நாள்அலங்காரம்: மோகினி வடிவம்கன்னி பூஜை: ஆறு வயது சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்கோலம்: கடலைமாவு கோலம்பூக்கள்: கதம்பம், மரிக்கொழுந்து மாலைநைவேத்யம்: பால்சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்வழிபாட்டின் பலன்: விருப்பம் நிறைவேறும்ஆறாம் நாள்அலங்காரம்: சண்டிகா தேவி, சர்ப்ப (பாம்பு) ஆசனத்தில் வீற்றிருப்பது போல்.கன்னி பூஜை: ஏழு வயது சிறுமியை காளிகாம்பாளாக எண்ணி வழிபடுதல்கோலம்: கடலை மாவு கோலம்பூக்கள்: மரிக்கொழுந்து, செம்பருத்தி, சம்பங்கி மாலை.நைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகை, பாசிப்பயறு சுண்டல் வழிபாட்டின் பலன்: கவலை தீர்தல், வழக்கில் வெற்றி கிடைத்தல்.ஏழாம் நாள்அல்ஙகாரம்: சாம்பவி துர்க்கை, பீடத்தில் அமர்ந்திருப்பது போல்.பூஜை: எட்டு வயது சிறுமியை பிராஹ்மியாக நினைத்து வழிபடுதல்கோலம்: மலர்க்கோலம்பூக்கள்: மல்லிகை, முல்லை மாலைநைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டுவழிபாட்டின் பலன்: விரும்பிய வரம் கிடைக்கும்எட்டாம் நாள்அம்பிகை: நரசிம்ம தாரிணி, சிங்க முகத்துடன் அலங்கரித்தல்பூஜை: 9 வயது சிறுமியை கவுரியாக வணங்குதல்திதி: அஷ்டமிகோலம்: தாமரை மலர்க்கோலம்பூக்கள்: வெண்தாமரை, சம்பங்கி மாலைநைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை.வழிபாட்டின் பலன்: பிள்ளைகள் நற்பண்புகளுடன் வளர்தல்.ஒன்பதாம் நாள்அம்பிகை: பரமேஸ்வரி, திரிசூலம் ஏந்தியது போல் அலங்கரித்தல்பூஜை: பத்து வயது சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்கோலம்: வாசனைப் பொடிக்கோலம்பூக்கள்: துளசி, மல்லிகை, பிச்சி, தாமரை, மரிக்கொழுந்து மாலைநைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் சேர்த்த பாயாசம், கேசரி, எள் உருண்டைவழிபாட்டின் பலன்: குடும்பமும், நாடும் நலம் பெறும். பத்தாம் நாள்: விஜயதசமிஅம்பிகை: விஜயா, பார்வதியின் ஸ்துõல வடிவம் கோலம்:மலர்க்கோலம்பூக்கள்: பலவித மலர் மாலைநைவேத்யம்: பால் பாயாசம், இனிப்பு வகைகள், சித்ரான்னம்வழிபாட்டின் பலன்: சகல சவுபாக்கியம்குறிப்பு: இந்த நாட்களில், மேற்கண்ட அலங்காரங்கள் செய்ய முடியாத பட்சத்தில், அலங்காரம் செய்ததாக மனதில் பாவனை செய்து வழிபட்டால் போதும்.