நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி திருவிழா
ADDED :1810 days ago
மதுரை: மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயிலில் அம்மன் வீணா தட்சிணா மூர்த்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.