உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம் :  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. விழா வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊஞ்சல் மண்டப சேவை இரவு 8 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாள் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !