திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விழா
ADDED :1909 days ago
நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்நது. சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள்நீர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.