திட்டை குரு பெயர்ச்சி விழா: குழந்தைகள், முதியோர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகேயுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவுக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், வரும் 15-ம் தேதி நடைபெறயுள்ள குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது:
குருபெயர்ச்சி வருகின்ற 15-ம் தேதி இரவு 9.48 மணி நிகழ்கிறது. இதனால் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு (குரு ஸ்தலம்), குரு பெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவிலில் தண்ணீர் குழாய், கிருமிநாசினி தெளித்தல், பக்தர்கள் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்து, கை சுத்திகரிப்பான் சுத்திகரிப்பு பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.