உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு  மயூரநாதர் திருக்கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி மெய்ப்பொருள் நாயனார்   குருபூஜை   கார்த்திகை  மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெற்றது.  மெய்ப்பொருள்  நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும்  நடைபெற்றன. விழாவில் மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர்  குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் நிறுவனர்  வழக்கறிஞர் டாக்டர் ராம.  சேயோன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !