உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீதியின் வழியில் நடப்போம்

நீதியின் வழியில் நடப்போம்


* பயம் வேதனை அளிக்கும். அன்பு பயத்தை போக்கும்.  
* பகைமை சண்டைகளை எழுப்பி விடும். அன்பு குற்றத்தை மன்னிக்கும்.
* பேச்சு அதிகமானால் நற்செயலில் ஈடுபட முடியாது.
* தீயவன் ஆணவத்தால் எளியவர்களை துன்புறுத்துவான். முடிவில் சிக்கலுக்கு ஆளாவான்.  
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீராக.
* நேர்மையின் பாதையில் நடப்பவன் புகழ் அடைவான்.
* கணவருக்கு அவமானத்தை உண்டாக்குபவள் எலும்புருக்கி நோய் போன்றவள்.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் கருணை பெறுவர்.
* பேசுவதில் மென்மை காட்டுங்கள். கோபம் கொள்வதில் தாமதமாக இருங்கள்.
* நீதியின் பாதையில் நன்மை மட்டுமே உண்டு.
* பண ஆசை தான் சகல தீமைகளுக்கும் மூலவேர்.
* துன்மார்க்கன், மூர்க்கன், மோகம் கொண்டவனை ஆண்டவர் வெறுக்கிறார்.
* நீதிமான்கள்  மரணத்திலும் நம்பிக்கையை இழப்பதில்லை.
* தாழ்த்தப்பட்டவர்களின் கூக்குரலை ஆண்டவர் மறப்பதில்லை.
பைபிள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !