சனியின் கெடுபலன் குறைய....
* சனிக்கிழமையில் விரதமிருந்து சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், எள்தீபம் ஏற்றுதல்
* விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலீஸா படித்தல்
* சனி பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை
* வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமையில் சுற்றி வந்து வழிபடுதல்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்தபின் நெய்தீபம் ஏற்றுதல்
* சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர். இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்தபிரபுவை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
* நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தால் கெடுபலன் குறையும்.
* சனீஸ்வரருக்கு எள்ளுச்சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு படைத்தல்
* நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டியை ஏழைகளுக்கு தானம் அளித்தல்
* பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் அன்னதானம் செய்தல்
* மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளுதவி செய்தல்