பழநி முருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :1775 days ago
பழநி : மார்கழி மாத கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் குடமுழுக்கு மண்டபம் வழியே பொது தரிசனத்தில் காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். திருஆவினன் குடி கோயில் முன்புறம் சாலையில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அடிவாரம் பகுதியில் அதிக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.