சதுரகிரிக்கு டிச.30 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
ADDED :1775 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று முதல் டிச.30 வரை 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து மலையேறவும், முககவசமணியவும் அறிவுறுத்தபட்டுள்ளது.