வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழா; சுவாமிக்கு திருக்கல்யாணம்
ADDED :13 hours ago
மேலூர்; அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று கோயிலில் உச்சிகிடா வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு சுவாமி வெள்ளிரதத்தில் அம்பாளுடன் எழுந்தருளினார். இன்று ( மார்ச் 7 ) தேரோட்டமும், மார்ச் 8 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.