திருப்பரங்குன்றம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :1743 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம் முடிந்து தைல காப்பு சாத்துப்படியானது.நடராஜர், சிவகாமி அம்பாள் கோயிலுக்குள் புறப்பாடாகினர்.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு அபிஷேகங்கள், பூஜை நடந்தது. தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் 1008 முத்துக்கள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் புவனேஸ்வரருக்கு அபிஷேகம், கோ பூஜை நடந்தது.