உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் தேரோட்டம் கோலாகலம்

ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் தேரோட்டம் கோலாகலம்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் 8-ம் நாளையொட்டி, கோமதி அம்மன் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழாவில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் 8-ம் நாளான இன்று கோமதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு விழா நாளை (ஜூலை 28) மாலை நடைபெறுகிறது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !