யாத்திரை செய்த பலன்
ADDED :1926 days ago
நம் நாடு எங்கும் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை தரிசிக்க வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் நிறைய இருந்தாலும் நீராட வாய்ப்பில்லை. கோமாதாவை வழிபட்டால் இந்த பலனை எளிதாக அடையலாம். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள், புண்ணிய தீர்த்தங்கள், மலைகள் இருப்பதால், அதனை சுற்றி வந்தால் புனித யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.