தேடி வரும் சுபலட்சுமி
ADDED :2045 days ago
பொதுவாக மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக இருக்கிறது. அந்தக் காலத்தில் வீடுகளில் தரையை சாணத்தால் மெழுகுவர். வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த நீரை பயன்படுத்துவர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாட்டையும் வளர்க்கலாம்.