விநாயகர் கோவில் 1ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :2032 days ago
புதுச்சேரி: செல்வசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபி ஷேகம் ௧ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை, அசோக் நகரில் உள்ள செல்வசக்தி விநாயகர் கோவில் திருப்பணி முடிந்து, வராஹி அம்மனுக்கு புதிய சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 28ம் தேதி முதல் நடக்கிறது. இன்று காலை கரிக்கோலம், மாலை யாக சாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, நாளை சகஸ்ர நாம ேஹாமம், பூஜைகள் நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 9 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.