உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: தை அமாவாசையை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில்  ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்  தை அமாவாசையை யொட்டி அதிகாலை 2:30 மணிக்கு நடை திறந்து அதிகாலை 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 7:00  மணிக்கு கோயிலில் இருந்து ராமர், சீதை, லெட்சுமணர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். ராமருக்கு தீபாராதனை நடந்ததும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய பக்தர்கள் திதி பூஜை, தர்பணம் செய்து அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடினர். பக்தர்கள்  வசதிக்காக பகல் முழுவதும் கோயில் திறந்திருக்கும். இரவு ராமரின் வெள்ளி ரத வீதி உலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !