உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெறிச்சோடிய திருவையாறு காவேரி கரை

வெறிச்சோடிய திருவையாறு காவேரி கரை

தஞ்சாவூர்,  திருவையாறு, கொரேனா முன்னச்சரிக்கை காரணமாக, தை அமாவாசையின் போது, காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறையில், புனித நீராடவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்பமண்டப படித்துறையில், ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினத்தில், ஆயிரக்கணக்கனோர், குடும்பத்தோடு வந்து புனித நீராடி, புரோகிதர்களிடம் தர்ப்பணம் செய்து, ஐயாறப்பரை வழிப்பட்டு செல்வது வழக்கம். இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் நீராட, தர்ப்பணம் செய்ய தடைவிதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் யாரும் காவேரி புஷ்ப மண்டப படித்துறைக்கு வராததால், அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !