லுார்தன்னை சர்ச் தேர் பவனி
ADDED :1958 days ago
மதுரை : -மதுரை புதுார் லுார் தன்னை சர்ச் 101 வது ஆண்டு விழாவை முன் னிட்டு மலர்களால் அலங் கரிக்கப்பட்ட மாதாவின் தேர்ப்பவனி நடந்தது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்தார். பாதிரியார் தாஸ்கென்னடி, உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், ஆஷ்லி, அருண், மரியதாஸ், பாஸ்கர் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சர்ச் அனைத்து பக்தசபை நிர்வாகிகள் செய்தனர்.