உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன்

விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விடிய விடிய வீதியுலா வந்த விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு, பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் ஆறாம் நாள் உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று (22ம் தேதி) ஆறாம் நாள் உற்சவமாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு, பெரிய நாயகர் காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.


இதற்காக, அன்று பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், கயிலை வாத்தியங்கள் முழங்க, கிழக்கு கோபுர வாயிலை திறந்து, விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பட்டு, விடிய விடிய பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மதியம் புறப்பட்ட பஞ்சமூர்த்திகள், இன்று மதியம் 2:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர். சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு செய்து, உற்சவ மூர்த்திகளை கோவிலுக்குள் கொண்டு சென்றனர். நாளை மறுநாள் (25ம் தேதி) தேரோட்டம், 26ம் தேதி மாசிமகம், தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !