உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

மதுரை: மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும்,  கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில், மாசி மாத  வளர்பிறை   பிரதோஷ பூஜை  மற்றும் சிறப்பு அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  சுவாமிக்கும்,  நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.சுவாமி  சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார். இன்றைய பூஜை உபயதாரர்கள்  கோட்டப்பட்டி  திரு. ராஜ சிவராமன், குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் லிங்காஷ்டகம், கோளறு பதிகம், தேவாரம்,  திருவாசகம், நந்தியம் பதிகம்  பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  வெண்பொங்கல் அன்னம்,  பஞ்சாமிர்தம்,  பிரசாதம் வழங்கப்பட்டது.  ரமேஷ் அய்யர்,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !