உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் மாசி பிரமோத்ஸவ தேரோட்டம்

ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் மாசி பிரமோத்ஸவ தேரோட்டம்

காரைக்குடி : காரைக்குடி அருகே மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் கோயில் பிரமோற்ஸவத் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.


மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நூற்றீஸ்வரர் கோயில் திருவிழா கடந்த பிப்.17 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் ரிஷப, அன்ன, சிம்ம, கிளி உள்ளிட்ட வாகனங்களில்எழுந்தருளி திரு வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டத்தை முன்னிட்டு, காலையில் சுவாமி மற்றும் அம்பாள்திருத்தேரில் எழுந்தருளினர். நேற்று மாலை 4:40 மணிக்கு நகரத்தார்கள்மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. இன்று மதியம் 12:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 7 :00 மணி சப்தாவரணம் நடக்கும். மாத்தூர் கோயில் நகரத்தார்கள் சார்பில் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர்அழகப்பன், துணை தலைவர் சிதம்பரம், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் செந்தில்நாதன்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !