உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்மை தருவார் கோயிலில் ரிஷப வாகனத்தில் உலா

நன்மை தருவார் கோயிலில் ரிஷப வாகனத்தில் உலா

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி  திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தனர்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு ராணி சாஹிபா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி  திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாள் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதி ராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !